Friday, March 7, 2014

அடி பெண்ணே!!!!



சாமர்த்தியமாய் வாழ்க்கையில் பாதியை நகர்த்தும் வல்லமை
சமாதான வெண்புறாவிற்கு தூதுவிடும் வல்லமை
சளைக்காத மனபக்குவம் சளைத்திடாத வல்லமை...
சலிப்பிற்குள்ளும் வலியை விரட்டியடிக்கும் வல்லமை
சுகத்திலும் சுகமான வல்லமை.

சாக்கும் போக்கும் விரட்டியடிக்கும் வல்லமை
சாதாரணமாய் ரணங்களை விரட்டிடும் வல்லமை
சகுனத்திற்கு முத்திரை குற்றிய மானிடத்தை விரட்டிடும் வல்லமை
சரிநிகரானது வாழ்க்கையில் பாதி என்பதற்கானது
வல்லமை
உன் வாழ்க்கையின் வெற்றிப்படி.அடி பெண்ணே!!!!!!!!!!

ஆக்கம்.
by.sujatha.

No comments:

Post a Comment